ஆப்நகரம்

காயிதே மில்லத் கல்லூரியின் 30 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை காயிதே மில்லத்தி கல்லூரிக்கு திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Jul 2019, 4:49 pm
திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரி நிர்வாகத்திற்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


கடந்த திமுக ஆட்சி காலத்தில் சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கலைக்கல்லூரி பயன்பாட்டுக்கு 40 ஏக்கர் நிலம் வழக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு கல்லூரி பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை தவிர பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்டகாலமாக வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கோத்தாரி, கார்த்திகேயன் நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பவும், அது குறித்து ஆறு மாதத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி