ஆப்நகரம்

மதுரை கிரானைட் மோசடி: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு - சென்னை ஐகோர்ட்

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 4:48 pm
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதால் அவர் அடுத்து அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது. இவரது பணி காலத்தில் மதுரை கிரானைட் குவாரியில் அரங்கேறிய ரூ.1,12,681 கோடி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil சகாயம் ஐஏஎஸ்


அந்த ஊழலை குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றமே சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது. விசாரணையை துவக்கிய மூன்றே மாதத்தில் நீதி நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தவர், குவாரிகளை மட்டுமல்லாமல் கிரானைட் குவாரிகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் குரல் கொடுத்தார்.

இதனிடையே சகாயம் கிரானைட் முறைகேடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

முறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் - மதுரை நீதிமன்றம்

இந்த நிலையில் மதுரை கிரானைட் குவாரி மோசடி வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சிவஞானம் அமர்வு, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் என்றும் கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அடுத்த செய்தி