ஆப்நகரம்

லஞ்சமா வாங்குறீங்க; அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திடீர் சோதனைக்கு உத்தரவு!

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Mar 2019, 1:08 pm
தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன. எந்தவொரு சான்றிதழ்கள் வேண்டுமென்றாலும், லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியாது என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil High Court


இதுகுறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி