ஆப்நகரம்

ஹெச்.ராஜா கைது விவகாரம்; சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுரை!

ஹெச்.ராஜாவை கைது செய்ய கோருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2018, 11:33 am
சென்னை: ஹெச்.ராஜாவை கைது செய்ய கோருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Samayam Tamil H Raja


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, நீதிமன்ற உத்தரவை போலீசார் அமல்படுத்தினர். அப்போது அங்கு வந்த பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை கடுமையாக சாடினார். இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் தான் பேசியதை எடிட் செய்து, சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக ஹெச்.ராஜா விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் நீதியரசர்கள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு, ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் ஹெச்.ராஜாவை போலீசார் அண்ணாச்சி என்று அழைப்பதால், விசாரணை முறையாக நடக்காது என வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதனை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் அமர்வு, ஹெச்.ராஜா கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீதித்துறை பற்றிய விமர்சனத்தை நாங்களே முன்வந்து விசாரித்து வருகிறோம். வேறு புகார், கோரிக்கை பற்றி போலீசிடமும், அவர்கள் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்திடமும் அணுகுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.

Chennai High Court advises to access related court in H.Raja arrest issue.

அடுத்த செய்தி