ஆப்நகரம்

அரசு அனுமதியுடன் கடைசி மெரினா போராட்டம் எப்போது நடந்தது? நீதிமன்றம் கேள்வி

அரசு அனுமதியுடன் மெரினாவில் கடைசியாக நடைபெற்ற போராட்டம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 4:32 am
அரசு அனுமதியுடன் மெரினாவில் கடைசியாக நடைபெற்ற போராட்டம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai high court


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 30 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதற்கு முன்புள்ள தமிழக முதல்வர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை மெரினாவில் கடைசியாக அரசு அனுமதியுடன் நடைபெற்ற பேராட்டம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி