ஆப்நகரம்

கும்பகா்ணனை போல் தூங்கக் கூடாது: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

கும்பகா்ணனை போல் தூங்காமல் தமிழக அரசு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 8:33 pm
கும்பகா்ணனை போல் தூங்காமல் தமிழக அரசு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


1989ம் ஆண்டில் தமிழக அரசு பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகா்களாக பணியாற்றியவா்களை 3ம் நிலை நூலகா்களாக மாற்றி உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கில் பதவி உயா்வு விதிகளை வகுக்க தமிழக நிா்வாகத் தீா்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால், 17 ஆண்டுகளுக்கு பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது. இந்நிலையில் மாவட்ட நூலகா்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3ம் நிலை நூலகா்களாக மாற்றப்பட்ட 4 போ் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் தீா்பபாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பின்னா் விதிகள் வகுத்ததால் வழக்கு மூலம் நீதிமன்றம் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என்று உயா்நீதிமன்றம் வேதனை தொிவித்தது.

மேலும் இனியாவது கும்பகா்ணனை போல தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தொிவித்த நீதிபதிகள், 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரா்களுக்கு வழக்கு செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி