ஆப்நகரம்

ஒரு மரத்த வெட்டுனா 10 மரம் நடணும் : ஹைவேஸுக்கு ஹைகோர்ட் போட்டுள்ள கண்டிஷன்!!

சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திட்டதை செயல்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 6:02 pm
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
Samayam Tamil ஒரு மரத்த வெட்டுனா 10 மரம் நடணும் : ஹைவேஸுக்கு ஹைகோர்ட் போட்டுள்ள கண்டிஷன்!!


மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராமங்களைச் சேர்ந் நிலங்களை கையகப்படுத்த தடைக் கோரி, டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வவு விசாரணை நடைபெற்று வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு தகவல்!!

விசாரணையின்போது, "இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல் புதிதாக இந்த திட்டத்தை கொண்டு வருவதால் விவசாய நிலங்கள், வனப்பகுதிகள், நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படும்" என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று (புதன்கிழமை ) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதில், " சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்கீழ் முறையான அனுமதி பெறும்வரை, தேசிய நெடுஞ்சாலை துறை இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக் கூடாது.

அதேசமயம், இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த அரசாணையும் ரத்து செய்யப்படவில்லை. முறையான அனுமதி பெறும்பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம்.

'தர்பார்' ரிலீசுக்கு ஹைகோர்ட் வைத்துள்ள 'செக்' !!

மேலும், இந்த நெடுஞ்சாலை திட்டத்திற்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 10 மரங்கள் என்கிற விகிதத்தில் நடப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி