ஆப்நகரம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Samayam Tamil 15 Jul 2020, 2:33 pm
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

வழக்கம் போல மாணவிகளே அதிகளவு தேர்ச்சி... தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடித்த சென்னை

முன்னதாக, ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்ததுடன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது.

மேலும், மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் எனவும் நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி