ஆப்நகரம்

திமுக துப்பாக்கி எம்எல்ஏவை வெளியே விட்டது ஐகோர்ட்...

இடத் தகராறு பிரச்சினை காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது...

Samayam Tamil 6 Aug 2020, 4:33 pm
செங்கல்பட்டு மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், கடந்த 11ஆம் தேதி நிலத் தகராறு காரணமாகச் சீனிவாசன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு இதயவர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம்சுமத்தப்பட்டவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil திமுக துப்பாக்கி எம்எல்ஏவை வெளியே விட்டது ஐகோர்ட்...
திமுக துப்பாக்கி எம்எல்ஏவை வெளியே விட்டது ஐகோர்ட்...


திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனுக்கும் மற்றொரு குழுவுக்குமிடையே இடம் தொடர்பாகக் கடந்த மாதம் 11ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின்போது இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இதயவர்மன், எதிர் தரப்பினரில் ஒருவரான குமார் என்பவரை நோக்கிச் சுட்டுள்ளார். அவர் மீது குண்டு படவில்லை.

இதையடுத்து குமாரின் கூட்டம் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தன்னிடமிருந்த ரைஃபில் துப்பாக்கியை வைத்து ஓடிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து இதயவர்மன் சுட்டுள்ளார். அதில் சீனிவாசன் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்த தாக்குதல் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்கு செய்து இதயவர்மன் உள்பட 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

“திமுக எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைய தயார்” வி. பி துரைசாமி!

முதற்கட்ட விசாரணையில் இதயவர்மன் பயன்படுத்திய 2 துப்பாக்கிகளின் உரிமம் 2019ஆம் ஆண்டே முடிந்து விட்டது என்பது தெரியவந்தது. இதுபோக இதயவர்மனிடம் உரிமமே இல்லாத மற்றொரு துப்பாக்கியும் இருந்துள்ளது.

போலீஸ் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இதயவர்மன் சட்டவிரோதமாகத் தனது பண்ணை வீட்டில் தோட்டாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என இதயவர்மன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணையை நடத்தப்பட்ட நிலையில், ஜாமீன் கோரிய மனு விசாரணை இன்றும் நடந்தது. அப்போது இதயவர்மனுக்கு நிபந்தனை உடன் ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்ற அறிவித்தது. அதபோல் இதயவர்மன்னுடன் கைது செய்யப்பட ௧௧ பேருக்கும் ஜாமீன் வழங்க பட்டுள்ளது.

அடுத்த செய்தி