ஆப்நகரம்

ஒருவழியாக ராபர்ட் பயஸுக்கு பரோல் கிடைத்தது!

ராபர்ட் பயஸ் பரோல் மனுவை சிறைத் துறை பரிசீலிக்காத நிலையில், உயர் நீதிமன்றம் ஒரு மாதம்...

Samayam Tamil 21 Nov 2019, 1:26 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாகச் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Samayam Tamil robaeypaj-large-1569477355


மேலவளவு கொலை வழக்கு: சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை!

இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஆளுநர் முடிவெடுக்காத காரணத்தால் அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறி நிலவி வருகிறது.


சிறையில் வாடும் அவர்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகள் சார்ந்து அவ்வபோது பரோல் கேட்டு விண்ணப்பிப்பதும், அதைச் சிறைத் துறை கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாகிப் போனது.

சில நாட்கள் முன் தனது மகன் திருமணத்தையொட்டி 30 நாட்கள் பரோல் கோரி ராபர்ட் பயஸ் சிறைத் துறையிடம் விண்ணப்பித்திருந்தார். வழக்கம்போல் சிறைத் துறை ராபர்ட் பயேஸின் மனுவைப் பரிசீலிக்கவில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் பயஸ் பரோல் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அந்த மனுவில், சிறைத் துறை தனது பரோல் மனுவைப் பரிசீலிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்து சென்ன உயர் நீதிமன்றம் ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிறைத் துறையின் சட்ட நடைமுறைகள் முடிந்தபின் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி