ஆப்நகரம்

மொினாவில் அய்யாகண்ணு போராட நீதிமன்றம் அனுமதி

மொினாவில் போராட்டம் நடத்த விவசாய சங்க தலைவா் அய்யாகண்ணுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Samayam Tamil 28 Apr 2018, 3:40 pm
மொினாவில் போராட்டம் நடத்த விவசாய சங்க தலைவா் அய்யாகண்ணுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காமல் மத்திய அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு கண்டனம் தொிவிக்கும் விதத்தில் சென்னை மொினா கடற்கரையில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்க தலைவா் அய்யாகண்ணு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

அவரது மனுவில் மொினா கடற்கரையில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோாியிருந்ததாா். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் பேச்சுரிமையையும், எழுத்துாிமையையும் வெளிப்படுத்த அனுமதி உள்ளது என்ற நிலையில், அய்யாகண்ணுவுக்கு 1 நாள் மட்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மொினா கடற்கரை சாலை என்பது போக்குவத்துக்கு மிகவும் முக்கியமான சாலை என்பதால் பொதுமக்களுக்கோ, பிற நபா்களுக்கோ போராட்டத்தால் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி