ஆப்நகரம்

பள்ளி கட்டணம்: பிரபல தனியார் பள்ளிகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு!

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

Samayam Tamil 23 Sep 2020, 5:56 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பள்ளி கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிர்பந்திப்பதாகவும் புகார் எழுந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 70 சதவீதத்தை வசூலித்து கொள்ளலாம். அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணத்தை முன் கட்டணமாக ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்‍குள் வசூலித்துக்‍ கொள்ளலாம். பள்ளிகள் திறந்த பிறகு மீதமுள்ள கட்டணத்தை 2 மாதங்களுக்‍குப்பின் வசூலிக்‍கலாம் என்று உத்தரவிட்டது. அதன் பிறகு, முதல் தவணை செலுத்துவதற்கான கால கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!

ஆனாலும், சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை கேட்டு நிர்பந்திப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மிண்டும் இன்று வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளாது. அவற்றில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. மேலும், அதில் 9 பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்தித்துள்ளன என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் கூடுதல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

புகாருக்கு உள்ளான பள்ளிகள்


புகாருக்கு உள்ளான பள்ளிகள்


புகாருக்கு உள்ளான பள்ளிகள்


இதையடுத்து, அந்த 9 பள்ளிகள் மீதும் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர் வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40 சதவீதம் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை என்றும் அப்போது உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

இதனிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக எந்த வித புகாரும் வரவில்லை என சிபிஎஸ்சி வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனாலும், குழந்தைகளின் நலன் கருதி சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க மெயில் ஐடி உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அடுத்த செய்தி