ஆப்நகரம்

மரக்காணம் கலவரம்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மரக்காணம் கலவரம் தொடர்வான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2022, 11:57 am
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணையை தமிழக அரசு தொடரலாம் எனவும், இழப்பீடு நிர்ணயம் செய்வது என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது்.
Samayam Tamil marakkanam


மாமல்லபுரத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன.

வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டையிலிருந்து வந்த எச்சரிக்கை: முடிவை மாற்றினாரா எடப்பாடி?
இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014இல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும், நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜி.கே. மணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஜி. கே.மணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: இறையன்பு போட்ட ஆர்டர்!
இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவு காரணமாக, இழப்பீடு குறித்த விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி விட்டதால், மீண்டும் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பா.ம.க. தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடரலாம் எனவும், ஆனால் இழப்பீடு நிர்ணயம் என்பது இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி