சென்னை: மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா வைத்த கைரேகை போலி என தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா கைரேகையை வழங்குமாறு பெங்களூர் சிறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல்களின்போது, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஜெயலலிதா பெங்களூர் சிறையில் வைத்த கைரேகையை அளிக்கும்படி பெங்களூர் சிறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆதார் ஆவணங்களில் ஜெயலலிதா வைத்துள்ள கைரேகையை டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் கமிஷன் முன்பாகவும் இதே பிரச்சனையை சரவணன் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல்களின்போது, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஜெயலலிதா பெங்களூர் சிறையில் வைத்த கைரேகையை அளிக்கும்படி பெங்களூர் சிறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆதார் ஆவணங்களில் ஜெயலலிதா வைத்துள்ள கைரேகையை டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் கமிஷன் முன்பாகவும் இதே பிரச்சனையை சரவணன் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.