ஆப்நகரம்

புகார்தாரர்கள் பல்டி: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து..!

செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 6 Aug 2021, 7:10 pm
கடந்த 2011 -2015 இல் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் திமுகவில் இணைந்ததையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு மின்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முன்னதாக செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனையிட்ட மத்திய குற்றப்பிரிவு, சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெறப்பட்ட சுய விவரக் குறிப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 27ம் தேதி இந்த வழக்கு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்ற பத்திரிகை நகல் தாக்கல் செய்வதற்காக செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்களிக்கவோ சலுகை வழங்கவோ முடியாது என்று காட்டமாக கூறியதுடன் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

செப்., 1 முதல் பள்ளிகள் திறப்பு; ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், அரசு தரப்பு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காததாலும், பணத்தை திருப்பி தந்து விட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் கூறியதை அடுத்தும் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அடுத்த செய்தி