ஆப்நகரம்

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி சுயட்சை வேட்பாளர் சிங்காரவேல் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Samayam Tamil 2 May 2019, 11:37 pm
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி சுயட்சை வேட்பாளர் சிங்காரவேல் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Samayam Tamil Madurai Highcourt 123


தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது. தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு.

தூத்துக்குடி பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிங்காரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்காக சமர்ப்பிக்க கோரிய ஆவணங்களில் சாதி சான்றிதழ் இல்லை என்பதற்காக எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் தேதி 12 மணிக்குள்ளாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளியான நான் சாதி சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக வாய்மொழியாக கூடுதல் கால அவகாசம் கோரிய நிலையில் எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவரே எனது மனுவை நிராகரித்தது சட்டவிரோதம். ஆகையால் எனது மனுவையும் ஏற்று, என்னையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், "தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது. தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி