ஆப்நகரம்

எழுத்தாளர் கி.ரா.மீது தொடரப்பட்ட வழக்கு: ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கி.ராஜநாராயணன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 2:39 pm
சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் எழுத்தாளர் கி.ரா என்கிற ராஜநாராயணன், 97 வயதிலும் எழுத்துப் பணியை தொடர்ந்து வருகிறார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் கி.ரா கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளாக புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.
Samayam Tamil Untitled collage (2)


கதைசொல்லியின் பயணம்: கி. ரா பிறந்தநாள் இன்று

கோபல்ல கிராமம், கோபல்ல கிராம மக்கள், அந்தமான் நாயக்கர், கிடை, பிஞ்சுகள் என பல நாவல்களும், கதவு, வேட்டி என பல சிறுகதை தொகுப்புகளும், கரிசல் காட்டு கடுதாசி உள்ளிட்ட கட்டுரைத்தொகுப்புகளும் எழுதியுள்ளார். மேலும் பல நாட்டுப்புறக் கதைகளை தொகுத்துள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு கி.ரா வார பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது, ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கி.ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கி.ரா மீது வன்கொடுமை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை. எனவே கி.ரா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி