ஆப்நகரம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் குறித்த வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Aug 2020, 9:12 pm
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக, நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு அங்கு காவலாளி, கார் ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil kodanadu


இதேபோன்று எஸ்டேட்டில் கொள்ளை சம்பவங்களும் நடைபெற்றதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அரசு தரப்பு சாட்சியான சாந்தா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி முதல்வர் பழனிசாமி: துரைமுருகன் காட்டம்!!

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை மூன்று மாதத்துக்கு முடிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி