ஆப்நகரம்

இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றம் அரசுக்கு "அட்வைஸ்" !!

பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 6 Jan 2020, 9:23 pm
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ என்ற 22 வயது இளம்பெண், கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி, பள்ளிக்கரணை சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
Samayam Tamil இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றம் அரசுக்கு அட்வைஸ் !!


அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த திருமண விளம்பர பேனர் சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாயும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏழு லட்சம் ரூபாயும் அளித்தன.

சுபஸ்ரீ வழக்கு: அதிமுக ஜெயகோபாலுக்கு நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே, தனது மகளின் அகால மரணத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு சுபஸ்ரீயின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சுபஸ்ரீயின் தந்தை கொடுத்துள்ள விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது" என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "சுபஸ்ரீ தந்தையின் இழப்பீடு கோரிக்கையை நான்கு வாரத்துக்குள் பரிசீலித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

அத்துடன் பேனர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை ஜனவரி 22 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி