ஆப்நகரம்

ஈசிஆரில் விதிமுறை மீறி பங்களா; கமல் உட்பட 138பேருக்கு நோட்டீஸ்!

சென்னை ஈசிஆரில் விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டியதாக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 6 Mar 2018, 5:54 pm
சென்னை ஈசிஆரில் விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டியதாக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai high court orders cmda to send notice to built house beyond the rules case in ecr
ஈசிஆரில் விதிமுறை மீறி பங்களா; கமல் உட்பட 138பேருக்கு நோட்டீஸ்!


ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், உத்தண்டி கடற்கரை பகுதியில் தனக்குச் சொந்தமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கோரினால், சிஎம்டிஏ மறுக்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து அனுமதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், தங்கள் இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே, மற்றவர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதுபோல், தங்களுக்கும் அனுமதி வழங்க, CMDA-விற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசராணைக்கு வந்தது. அப்போது, CMDA மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிடுகிற இடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள், விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், இதில், நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் அடங்கும் என CMDA தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், விதிகள் மீறப்பட்டிருந்தால், அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு CMDA நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, CMDAவும், சென்னை மாநகராட்சியும், அடுத்த மாதம் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி