ஆப்நகரம்

ஜெயலலிதா சொத்துகளை யார் நிர்வகிப்பது? தீபா, தீபக் நேரில் ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபா மற்றும் தீபக்கை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Aug 2019, 9:23 pm
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் தொடர்ந்திருந்தனர்.
Samayam Tamil Chennai High Court


இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு, தங்களுக்கு ஜெயலலிதா ரூ.40 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார்.

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம்- கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்!

எனவே அவரது போயஸ் தோட்ட இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. நில அளவையர் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே அளவிடும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் அல்லது வேறு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்றார். அதற்கு, ஜெயலலிதா மறைவிற்கு பின் போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இவங்க தான் அந்த 27 பேர்; இனி டிவி விவாதங்களில் வெளுத்துக் கட்டப் போகும் தமிழக பாஜக!

இதையடுத்து பேசிய அரசு வழக்கறிஞர், ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடில் இருக்கிறது என்றார்.

இதையடுத்து பேசிய தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வேறு சிலரும் தங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை கொட்டப் போகிறது!!

கடந்த 1996ஆம் ஆண்டு வங்கி ஒன்றில் ஜெயலலிதா பெற்ற ரூ.2 கோடி கடன், தற்போது வட்டியுடன் ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மை தானா என்று தெரிய வேண்டும்.

எனவே வரும் 30ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தீபா மற்றும் தீபக் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி