ஆப்நகரம்

ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Jan 2019, 4:41 pm
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
Samayam Tamil Jayalalitha


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

அப்போது, ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் ரூ.100 கோடி மதிப்பிருக்கும் என்று தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி