ஆப்நகரம்

அரசு நிலத்தில் தலைவர்களுக்கு சிலைகள் வைக்கக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Samayam Tamil 27 Oct 2021, 10:56 pm

ஹைலைட்ஸ்:

  • அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது
  • சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Madras HC
தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலத்தில் சிலைகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.
முல்லை பெரியாறு அணை: கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!
மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

அடுத்த செய்தி