ஆப்நகரம்

ஆன்லைன் கல்விக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படும் என்றும் , குழந்தைகளுக்கு ஆபாச வலைதளங்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Samayam Tamil 6 Jul 2020, 2:04 pm
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
Samayam Tamil சென்னை உயர் நீதிமன்றம்


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இடைவேளையின்றி தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கின பள்ளி,கல்லூரிகள். இதனால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படும் என்றும் , குழந்தைகளுக்கு ஆபாச வலைதளங்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து ஆன்லைன் வகுப்ப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ஆன்லைன் கல்விக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஆன்லைன் கல்வியை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 15ஆம் தேதிக்குள் வெளியிடுவோம் என்று மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி