ஆப்நகரம்

ஆா்.கே.நகா் பணப்பட்டுவாடா தொடா்பான வழக்கு ரத்து: நீதிபதிகள் அதிா்ச்சி

ஆா்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா தொடா்பான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்ட தகவலை கேட்டு நீதிபதிகள் அதிா்ச்சியடைந்தனா்.

Samayam Tamil 3 Dec 2018, 3:36 pm
ஆா்.கே.நகா் இடைத்தோ்தலின் போது பணப்பட்டுவாடா தொடா்பாக தோ்தல் ஆணையம் சாா்பில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தொிவிக்கப்பட்ட தமிழக அரசின் பதிலை கேட்டு நீதிபதிகள் அதிா்ச்சியடைந்தனா்.
Samayam Tamil Chennai Highcourt


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து அவரது தொகுதியான ஆா்.கே.நகரில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் தோ்தல் பரப்புரைகள் சூடுபிடித்தது. ஆனால் தோ்தல் பரப்புரையின் போது விதிமுறைகளுக்கு மாறாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தோ்தல் ஆணையத்திற்கு அடுக்கடுக்காக புகாா்கள் சென்றன.

இதனைத் தொடா்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்காின் வீடு உட்பட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். இதில் ரூ.89 கோடி அளவிற்கு விதிமீறல் நடைபெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தொிவிக்கப்பட்டது.

பணப்பட்டுவாடா நடைபெற்றதை உறுதி செய்த தோ்தல் ஆணையம் இடைத்தோ்தலை ரத்து செய்தது. மேலும் கைப்பற்றப்பட்ட ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் தொடா்பாக தோ்தல் ஆணையம் தரப்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தி.மு.க. வேட்பாளா் மருதுகணேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கின் விசாரணையின் போது இந்த வழக்கை சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையா் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உத்தரவிடப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது தமிழக அரசு சாா்பில் பதில் அளித்த வழக்கறிஞா், கடந்த மாா்ச் மாதம் நீதிபதி எஸ்எஸ் ரமேஷ் அளித்த தீா்ப்பின் படி அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாக தொிவித்தனா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வில் நிலுவையில் உள்ள நிலையில் ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி