ஆப்நகரம்

மருத்துவ உயர்படிப்பு மாணவர் சேர்க்கை பற்றி இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடுகிறது!

தமிழகத்தில் மருத்துவ உயர்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பற்றி இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளது.

TNN 6 May 2017, 10:48 am
தமிழகத்தில் மருத்துவ உயர்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பற்றி இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளது.
Samayam Tamil chennai high court to pronounce verdict on medical higher education admission today
மருத்துவ உயர்படிப்பு மாணவர் சேர்க்கை பற்றி இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடுகிறது!


மாநிலத்தில், நிலவிவரும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான குழப்பம் நீடிக்கிறது. இதனால், உயர்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாமல், மருத்துவ கல்வி நிறுவனங்களும் சிக்கலில் உள்ளன.

இந்நிலையில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது. இன்று மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.

இதில், மருத்துவ உயர்படிப்பு சேர்க்கையில் பின்பற்றப்பட வேண்டியது எம்.சி.ஐ விதிகளா அல்லது தமிழக அரசு விதிகளா என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Tamilnadu: Chennai High Court to pronounce verdict on Medical higher education admission today

அடுத்த செய்தி