ஆப்நகரம்

இனி டிஜிட்டல் லைசென்ஸ் இருந்தாலே போதும்: சென்னை உயர்நீதிமன்றம்!

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என போலீஸாரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Dec 2018, 1:04 pm
வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil இனி டிஜிட்டல் லைசென்ஸ் இருந்தாலே போதும்: சென்னை உயர்நீதிமன்றம்!
இனி டிஜிட்டல் லைசென்ஸ் இருந்தாலே போதும்: சென்னை உயர்நீதிமன்றம்!


சில மாதங்களுக்கு முன், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதன்பேரில், வாகன ஓட்டிகள் கட்டாயமாக தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இனிமேல் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி