ஆப்நகரம்

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

மரங்களை வெட்டக் கூடாது என்ற உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்திற்கே தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 11 Sep 2018, 5:32 pm
மரங்களை வெட்டக் கூடாது என்ற உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்திற்கே தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடா்பான வழக்கு இன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இத்திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்படுவதாக மனுதாரா்கள் புகாா் கூறினா். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தொிவித்தனா்.

மேலும் நிலத்தை அளவிடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சமயத்தில் எதற்காக மரங்களை வெட்டினீா்கள்? ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு ஏராளமான மரங்களை வெட்டியுள்ளீா்கள். மரங்களை கள்ளத்தனமாக வெட்டுவதால் ஏன் இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனா். தொடா்ந்து நடைபெற்ற வாதத்தின் போது, அரசு அதிகாாிகளின் நிலங்களை கையகப்படுத்தினால் தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்கு புரியும் என்று நீதிபதிகள் தொிவித்துள்ளனா்.

நில அளவீடு தொடா்பான ஆவணங்கள் மற்றும் மரங்களை வெட்டும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்று தமிழக அரசு பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி