ஆப்நகரம்

சென்னை மத்திய அரசு பள்ளியில் ஆசிரியர் பணி..! பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Kalakshetra Recruitment 2020: சென்னை கலாக்சேத்ரா பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 25 Jan 2020, 12:13 pm
சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் கலாக்சேத்ரா பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil Kalakshetra Recruitment 2020


மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு கலாக்சேத்ரா நிறுவன பள்ளி சென்னையில் இயங்கி வருகிறது. இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், பொருளாதாரம், அக்கவுண்ட்ஸ், கம்ப்யூட்டர் சைன்ஸ், ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Also Read This:


கலாக்சேத்ராவில் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் பணி காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், தற்காலிக பணி என்று பாராமல், தகுதியுள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். அடுத்தடுத்து வரும் வேலைவாய்ப்புக்கு இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருவான்மியூரில் செயல்படும் கலாக்சேத்ரா பள்ளியில் பொருளாதார பிரவு ஆசிரியர் பணிக்கு பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.kalakshetra.in இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
1. The Secretary, Besant Theosophical Higer Secondary School
2. Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai – 600 041

அடுத்த செய்தி