ஆப்நகரம்

சென்னையில் கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா தீம் பார்க்கின் ராட்டினம் சரிந்து, ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதன் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

TOI Contributor 12 May 2016, 6:34 pm
சென்னை தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா தீம் பார்க் ராட்டினம் சரிந்து, ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதன் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil chennai kishkinta amusement park owner mangager arrested
சென்னையில் கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது!


சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாக விளங்கும் கிஷ்கிந்தா தீம் பார்க்கில் உள்ள ராட்டினத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்துக் கொண்டிருந்த ஊழியர் மீது ராட்டினம் உடைந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய அனைவரும் தாம்பரத்தில் உள்ள தீபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த தாம்பரம் போலீசார், கிஷ்கிந்தா தீம் பார்க் உரிமையாளர் ஜோத் முன்னூஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி