ஆப்நகரம்

சென்னை கோயம்பேடு பார்க்கிங்: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ் - சி.எம்.டி.ஏ. அறிவிப்பு!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி சென்றவர்களுக்கான முக்கியமான அறிவிப்பை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2020, 2:47 pm
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டு சென்ற இரு, நான்கு சக்கர வாகனங்களை எடுக்கும்போது, ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பாதிப்பால் அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையொட்டி கோயம்பேடு டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வாகனங்களை திரும்ப எடுக்க செல்கின்ற பொதுமக்களிடம் இந்த வாகனங்களுக்கு 55 நாட்களுக்கும் முழுநேர வாடகை கட்டணம் வசூலிப்பதாக புகர் எழுந்தது.

தற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்!

இதையடுத்து, ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டு சென்ற இரு, நான்கு சக்கர வாகனங்களை எடுக்கும்போது, ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வரின் அறிவுறுத்தலின் படி, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றிற்கு “ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்” என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மது விற்பனை படுஜோர்; முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

எனவே, பொதுமக்கள் ஒருநாளுக்குரிய கட்டணமாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.40, மிதிவண்டிகளுக்கு ரூ.15 மட்டும் வாடகை செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி