ஆப்நகரம்

கடல் காற்றுடன் ஒரு நீண்ட ரயில் பயணம்; வருகிறது தமிழகத்தின் கடலோர இருப்புப் பாதை...!

தமிழகத்தில் நீண்ட கடலோர இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு தெரிவித்துள்ளார்.

TNN 24 Jun 2017, 6:16 pm
சென்னை: தமிழகத்தில் நீண்ட கடலோர இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chennai kumari rail journey plans will start soon
கடல் காற்றுடன் ஒரு நீண்ட ரயில் பயணம்; வருகிறது தமிழகத்தின் கடலோர இருப்புப் பாதை...!


தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்பாதை பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று சென்னை வந்தார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுரேஷ் பிரபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர இருப்புப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றும், மத்திய அரசால் மட்டும் இந்த ரயில் பாதை அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

வேளச்சேரி - பரங்கி மலை ரயில்பாதை பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் கருத்துக்கள் முறைப்படி மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

Chennai Kumari rail journey plans will start soon.

அடுத்த செய்தி