ஆப்நகரம்

பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு தப்ப முயன்ற திருடனை மடக்கிப்பிடித்த விஜயகாந்த்

திருட்டு சம்பவத்திலிருந்து பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு தப்ப முயன்ற திருடன் வசமாக பிடித்து கைது செய்து போலீஸ் விஜயகாந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

Samayam Tamil 3 Feb 2019, 4:03 pm
திருட்டு சம்பவத்திலிருந்து பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு தப்ப முயன்ற திருடன் வசமாக பிடித்து கைது செய்து போலீஸ் விஜயகாந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
Samayam Tamil பெப்பர் ஸ்பிரே திருடனை மடக்கிப் பிடித்த காவலர்


சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளுக்கான கொள்ளை சம்பவங்களை தடுக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் காவலர் விஜயகாந்த். இவர் சம்பவம் நடந்த அன்று, வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் சாதாரண உடையில் ரோந்து சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் போலீசாரால் பல நாட்கள் தேடப்பட்டு வந்த திருடன் சுந்தரம் சுற்றி திரியும் தகவல் கிடைத்தது.

அப்போது விஜயகாந்த் திருடன் சுந்தரத்தை பிடிக்க முயன்றார். இந்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக சுந்தரன் தன்னிடமிருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து விஜயகாந்த் முகத்தில் அடித்துவிட்டார். ஆனால் காவலருக்கு பெரியளவில் பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனே விஜயகாந்த், திருடன் குறித்து மடிப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சுந்தரத்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

எனினும், பெப்பர் ஸ்பிரே அடித்ததால் காவலர் விஜயகாந்தின் கண், மூக்கு எரிச்சலடைந்தது. காவலர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது வீர தீர செயல்களுக்காக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி