ஆப்நகரம்

சென்னையை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் ரூம் போட்டு தற்கொலை

சென்னையை சேர்ந்த நபர், தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி சென்று, லாட்ஜில் ரூம் எடுத்து, பின்னர் அனைவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 19 Oct 2016, 3:16 pm
சென்னையை சேர்ந்த நபர், தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி சென்று, லாட்ஜில் ரூம் எடுத்து, பின்னர் அனைவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai man committed suicide with his family in puducherry
சென்னையை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் ரூம் போட்டு தற்கொலை


சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி துளசி, மகன் பாலமுருகன். இவர்கள் 3 பேரும் நேற்று புதுச்சேரி வந்துள்ளனர். அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இன்று காலை வெகுநேரமாகியும், அறை கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது, 3 பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

மேலும் அறையை ஆய்வு செய்தபோது மருந்து பாட்டில் ஒன்றையும், கடிதம் ஒன்றையும் கண்டெடுத்த போலீசார், இதுபற்றி விரிவான விசாரணை நடத்திவருகின்றனர்.

English Summary:
Chennai man committed suicide with his family in Puducherry, police launched detail probe.

அடுத்த செய்தி