ஆப்நகரம்

மசாஜ் சென்டர்கள் உரிமை பெற்று செயல்படுவது கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மசாஜ் சென்டர்கள் அரசிடம் உரிமம் பெற்று செயல்படுவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Apr 2019, 11:31 pm
தமிழகத்தில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களும், வரும் ஜூன் மாதம் முதல், மாநில அரசின் உரிமம் பெற்றுதான் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil மசாஜ் சென்டர்களுக்கு அரசு உரிமம் கட்டாயம்- உயர் நீதிமன்றம்
மசாஜ் சென்டர்களுக்கு அரசு உரிமம் கட்டாயம்- உயர் நீதிமன்றம்


மசாஜ் சென்டர்கள் தொழிலில் காவல்துறையினர் தலையிட தடைவிதிக்கக்கோரி பல்வேறு மசாஜ் நிலையங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மசாஜ் செண்டர்கள் நடத்த மாநில அரசின் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் கோரி ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் கோரி ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க மசாஜ் சென்டர்களுக்கு உத்தரவிட்டார். மசாஜ் நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.

மேலும், ஜூன் மாதம் வரை மசாஜ் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி