ஆப்நகரம்

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 1:09 pm
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!


கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலாமாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தமான், தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், நாளை மறுநாள் 55-75 கி.மீவேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வடதமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி