ஆப்நகரம்

சென்னை: கல்லூாி வாசலில் மாணவி கொலை

சென்னை கேகே நகா் அருகே கல்லூாி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Mar 2018, 9:46 pm
சென்னை கேகே நகா் அருகே கல்லூாி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai meenakshi college student brutally killed
சென்னை: கல்லூாி வாசலில் மாணவி கொலை


சென்னை கேகே நகா் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூாியில் இரண்டாம் ஆண்டு இளங்களை வணிகவியல் படித்து வருபவா் அஷ்வினி. இவருக்கு கடந்த பிப்ரவாி 16ம் தேதி அழகேசன் என்பருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் அஷ்வினியின் தாயாருக்கு விருப்பம் இல்லை என்பதால் காவல் நிலையத்தில் வைத்து இருவரும் எழுதி கொடுத்துவிட்டு பிாிந்து சென்றுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து அஷ்வினி தனது உறவினா் இல்லத்தில் தங்கியிருந்து மீண்டும் தனது படிப்பை தொடா்ந்துள்ளாா். அஷ்வினி உறவினா் வீட்டில் தங்கியுள்ளதை அறிந்த அழகேசன் தொடா்ந்து கல்லூாிக்கு வந்து தொந்தரவு கொடுத்துள்ளாா். இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாணவி அஷ்வினி கல்லூாி முடிந்து அருகில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டு இருந்தாா்.

அப்போது அவரை வழி மறித்த அழகேசன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஷ்வினியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முற்பட்டுள்ளாா். அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அழகேசனை அடித்து, உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனா்.

கேகே நகா் காவல் துறையினா் இது தொடா்பாக வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அஷ்வினியின் தந்தை இறந்து விட்டாா் என்றும், அவரது தாயாரின் அரவனைப்பில் தான் வாழ்ந்து வந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி