ஆப்நகரம்

பிப்ரவரி 12 வரை இப்படித் தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் ஷாக் நியூஸ்!

தமிழகம், புதுச்சேரியில் நான்கு தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Feb 2021, 2:27 pm
பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dry weather


அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு வரவேற்பு: பற்றி எரிந்த இரு கார்கள், கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :
ஹலோ நான் சசிகலா பேசுறேன்: யார் அந்த 3 அமைச்சர்கள், 10 எம்எல்ஏக்கள்?
பிப்ரவரி 8 , பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி