ஆப்நகரம்

9 மாவட்டங்களில் மழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்குதா?

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 3:03 pm
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Samayam Tamil chennai rains today


ஆகஸ்ட் 2ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார்(கோவை), வால்பாறை (கோவை) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: உடனே இதை பண்ணிடுங்க!
மீனவர்களுக்கான எச்சரிக்கை!

வங்க கடல் பகுதிகள்

ஜூலை 31 தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி