ஆப்நகரம்

இன்னையோட முடிஞ்சதாம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 11:21 am
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திர, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று (ஜனவரி 19) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil northeast monsoon


அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 20 -21 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

கருத்துக் கணிப்பு முடிவு: ஸ்டாலின், மம்தா, பினராயி வெற்றி வாய்ப்பு எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

சசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த அளவு எங்கும் மழை பெய்யவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி