ஆப்நகரம்

புரட்டி எடுக்கப்போகும் கனமழை: எச்சரிக்கை விட்ட வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2020, 2:05 pm
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும் கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu rains


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்றார்.

மேலும், தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் என்று கூறிய அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனக் கூறினார்.

தமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு: இதற்கெல்லாம் அனுமதி!

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 34செ.மீ, பந்தலூர் 19செ.மீ, ஹாரிசன் 18செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 13செ.மீ, சேலையூர், அவளாஞ்சி 11செ.மீ, சின்கோனா 9 செ.மீ, நடுவட்டம், கூடலூர் பஜார் 8 செ.மீ, மேல் பவானி 7செ.மீ, மேல் கூடலூர் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை!

மூணாறு நிலச்சரிவில் பலியானவர்கள் கயத்தாறைச் சேர்ந்தவர்கள்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, குஜராத், கடலோர பகுதியை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் கேரள கர்நாடக கடலோர பகுதிகள் லட்சத்தீவுகள் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி