ஆப்நகரம்

Chennai Rains: இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 15 Oct 2020, 2:43 pm
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain update


அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு இதுதான்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இரணியல் (கன்னியாகுமாரி), பெரியாறு (தேனி) தலா 5, சித்தார் (கன்னியாகுமாரி), குளச்சல் (கன்னியாகுமாரி) தலா 4 , வால்பாறை (கோவை), சின்னக்கல்லார் (கோவை), சுரலாக்கோடு (கன்னியாகுமாரி), பாபநாசம் (திருநெல்வேலி), பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி) ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்ககடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தீபாவளி...அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு?

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை (அக்டோபர் 16) இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.3 மீட்டர்வரை எழும்பக்கூடும்.

அடுத்த செய்தி