சென்னை: வடத்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர், “மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மழையின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஜூன் 1 முதல், செப்டம்பர் 25 வரை 39 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 31 சதவீதம் அதிகமாகும்.
Chennai Meteorological centre has said that the northern districts in Tamilnadu can expect heavy rain.
நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர், “மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மழையின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஜூன் 1 முதல், செப்டம்பர் 25 வரை 39 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 31 சதவீதம் அதிகமாகும்.
Chennai Meteorological centre has said that the northern districts in Tamilnadu can expect heavy rain.