ஆப்நகரம்

மூன்று நாள்களுக்கு மழை: அப்புறம் எப்படி இருக்கும் தெரியுமா?

அடுத்த மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Jan 2021, 1:52 pm
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn Rains


ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு!
அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
சசிகலா சொல்லும் இரு மெசேஜ்: ஜெயலலிதா காரில் பயணம்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 1 முதல் 3 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி