ஆப்நகரம்

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 17ஆம் தேதி வரையான நாள்களுக்கு வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Apr 2023, 3:38 pm
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil dry weather


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை (13.04.2023 முதல் 16.04.2023) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

ஏப்ரல் 17ஆம் தேதி (17.04.2023) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை (1 செ.மீ. வரை) பெய்யக்கூடும்.
பிரதமர் மோடி: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் - இளைஞர்கள் உற்சாகம்!
அதிகபட்ச வெப்பநிலை

ஏப்ரல் 13 மற்றும் எப்ரல் 14 தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி; அரசின் மேல்முறையீடு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம் அதிரடி!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி