ஆப்நகரம்

நாளை முதல் மழை படிப்படியாக மழை குறையும்.!

தமிழகத்தில், நாளை முதல் மழை, படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TNN 14 Nov 2017, 2:36 pm
தமிழகத்தில், நாளை முதல் மழை, படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil chennai meteorology centre press meet
நாளை முதல் மழை படிப்படியாக மழை குறையும்.!


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் வடகடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கு, கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீச வேண்டும். ஆனால், தற்போது வடதிசை நோக்கி காற்று வீசுவதால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி