ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுவையில், ஒரிரு இடங்களில், அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

TNN 15 Nov 2017, 1:12 pm
தமிழகம் மற்றும் புதுவையில், ஒரிரு இடங்களில், அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil chennai meteorology press meet
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!


சென்னை வானிலை மைய இயக்குநர், பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்தின் வடதிசையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தஞ்சாவூரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி