ஆப்நகரம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை: மெட்ரோ நிலையங்களில் பயணிகளுக்கு குறிப்பிட்ட சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jan 2019, 1:24 am
மெட்ரோ ரயில் பயணங்களைமக்களிடம் ஊக்குவிக்கும் நோக்கில், இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் இலவச பரிசோதனை முகாம்


சென்னை மெட்ரோ ரயில் நிலையம் 45 கி.மீ தொலைவு கொண்ட வழித்தட பாதையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பயன்பாட்டை பயணிகளிடம் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விளம்பர பணிகள் நடத்த திடமிடப்பட்டுள்ளது,

அதன்படி, சி.எம்.ஆர்.எல் மற்றும் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் அமைப்பும் இணைந்து சென்னையின் பல மெட்ரோ நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்களை நடத்தவுள்ளது.

இன்று முதல் வரும் 31ம் தேதி இந்த முகாம் இருக்கும் என்றும், காலை 8 முதல் முற்பகல் 11 மணி வரை பயணிகள் உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம், சக்கரை அளவு, நுரையீறல் மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகளை பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு பூங்கா, கீழ்பாக்கம், சென்ட்ரல், ஷெனாய் நகர், அண்ணா நகர் மேற்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம், கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய மெட்ரோ நிலையங்களில் பயணிகள் உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

இதற்கிடையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 10 கி.மீ தொலைவு அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் வரும் ஜனவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி