ஆப்நகரம்

மெட்ரோ பணிகள் 2020 ஜூனில் முழுமையடையும்; முதல்வர் பழனிச்சாமி!

மெட்ரோ ரயில் பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 3:07 pm
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
Samayam Tamil TN CM Palanisami
முதலமைச்சர் பழனிச்சாமி


சென்னையில் நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - ஏஜி., டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை, முதலமைச்சர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 28 கிமீ தூரம் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்தில் அதிநவீன வளர்ச்சி தான் மெட்ரோ ரயில் சேவை ஆகும்.

புதிய வழித்தடங்களின் மூலம் சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை பயணிகள் நேரடியாக சென்று வரலாம்.

அதேசமயம் சைதாப்பேட்டை மார்க்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.

பின்பு டிஎம்ஸ் மார்க்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயிலில்

> 0 - 2 கி.மீ தொலைவிற்கு ரூ.10,

> 2 - 4 கி.மீ தொலைவிற்கு ரூ.20,

> 4 - 6 கி.மீ தொலைவிற்கு ரூ.30,

> 6 - 10 கி.மீ தொலைவிற்கு ரூ.40,

> 10 - 15 கி.மீ தொலைவிற்கு ரூ.50,

> 15 - 20 கி.மீ தொலைவிற்கு ரூ.60,

> 20 - 50 கி.மீ தொலைவிற்கு ரூ.70

கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2020 ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் பணிகள் முழுமையடையும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Chennai metro rail works will be completed in June 2020 says TN CM Palanisami.

அடுத்த செய்தி