ஆப்நகரம்

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

TNN 22 Jul 2016, 7:25 pm
சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.
Samayam Tamil chennai metro train extension works inaugrate by jayalalitha
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்


சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி, மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில் ஆலந்தூர் முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதேபோல் சைதாப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரையிலான 9 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் நீட்டிப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கான பூமி பூஜை தண்டையார்பேட்டை விளையாட்டு அரங்கில், நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி வைக்கிறார். மேலும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அடுத்த செய்தி